tamilnadu

img

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஃபுளு காய்ச்சல் 5 மடங்கு அதிகரிப்பு

சென்னை,ஜூலை 29- இந்தியாவில் 2012ஆம் ஆண்டு முதல்  2018 ஆம் ஆண்டு  வரை ஃபுளுகாய்ச்சல் 5 மடங்கு  அதிகரித்திருப்பதாக அப் பல்லோ குழந்தைகள் மருத்துவ மனையின் ஆலோசகரும் சிறப்பு மருத்துவருமான டாக்டர் பிரியா சந்திரசேகர் கூறினார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,இந்த தொற்று நோய் வழக்கமாக வேறு  எந்த பிரிவினரையும் விட குழந்தைகளை அதிகமாக தாக்கு கிறது என்றார். தங்களது குழந்தை கள் நன்றாக படிக்கவேண்டும், நன்றாக விளையாடவேண்டும் என்று விரும்பும்பெற்றோர்கள் பள்ளி பருவத்திற்கு முன்பே மழலையர்பள்ளிகளில் சேர்க் கிறார்கள். அந்தபள்ளிகளில் மழைக்காலங்களில் அதிகமாக குழந்தைகளை ஃபுளு காய்ச்சல் தாக்குகிறது. 2016ஆம் ஆண்டு  எடுக்கப்பட்ட ஆய்வின் படி  இந்தியாவில் 5வயதுக்குட்பட்ட  குழந்தைகளில் ஒருகோடியே 60  குழந்தைகள் அந்தாண்டு ஃபுளு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அப் போது ஒருகோடியே 9 லட்சம்  குழந்தைகள்  வெளிநோயாளி களாகவும் 1 லட்சத்து 8ஆயிரம்  குழந்தைகள் உள் நோயாளி களாகவும்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்றும் அவர் கூறி னார். அறிவியல் வளர்ச்சி காரண மாகவும் மருத்துவ தொழில் நுட்பத்தின் காரணமாகவும் ஃபுளுகாய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அதிக  திறனுள்ள தடுப்பூசிகள் வந்துள்ள தாக டாக்டர் ஸ்ரீருபா தாஸ் கூறி னார். குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் பெற்றோர் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் பொருளா தார  ரீதியாக குடும்பம் பாதிக்கப்  படுவதாகவும் அவர் கூறினார்.